பீகார் தேர்தல்-போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோற்றார் ராப்ரி தேவி
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தான் போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளார்.
ரகோபூர் மற்றும் சோனீப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ராப்ரி. இதில் சோனீப்பூர் தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே பின்தங்கியிருந்தார். ரகோபூரில் முன்னணியில் இருந்தார். பின்னர் அதிலும் அவர் பின்தங்க விட்டார்.
இறுதியில் ரகோபூரில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் சதீஷ்குமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராப்ரியை வீழ்த்தினார்.
அதேபோல சோனீப்பூரிலும் ராப்ரி தோல்வியைத் தழுவினார்.
வீழ்ந்த தலைவர்கள், சாதனை வெற்றிகள்:
லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் கணவருடைய தம்பி ராஜ்சேகர் சஸ்ராம் தொகுதியில் தோற்றார்.
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பி பசுபதி பரஸ் அலலி தொகுதியில் தோற்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் காந்தி சிங் நோகா தொகுதியில் வீழ்ந்தார்.
முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள 7 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.
முஸ்லீம்கள் அதிகம் உள்ள முசாபர்பூர் தொகுதியில் முதல் முறையாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது. வெற்றி பெற்றவர் சுரேஷ் சர்மா.












Click it and Unblock the Notifications