திருப்பதி அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் வீட்டில் ஐடி ரெய்டு : 24 பேர் கொண்ட குழு திடீர் சோதனை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினர் சி. சத்தியநாராயணா வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் என்று சோதனை நடத்தினர்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினர் சி. சத்தியநாராயணா. அவர் கடப்பா மாவட்டம் பொத்துட்டூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். எர்ரமுனிரெட்டி காலனியில் அவருக்கு சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மேலும் குந்தகல் மற்றும் பெல்லாரியில் கட்டுமான நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இருந்து 24 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு கடப்பா வந்தது. அங்கு சத்தியநாராயணாவுக்குச் சொந்தமான வீடு, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் திடீர் என்று சோதனை நடத்தியது.












Click it and Unblock the Notifications