தொழிற்சங்க தேர்தலில் அதிமுக கேட்டதால் ஆதரித்தோம்-பண்ருட்டி ராமச்சந்திரன்
கோவை: போக்குவரத்து தொழிற்சங்க தேர்தலில் அதிமுக ஆதரவு கோரியதால் ஆதரவு தந்தோம். மற்றபடி இது தேர்தல் கூட்டணி அல்ல என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆரியர், திராவிடர், வடநாடு, தென்னாடு என பாகுபாடு பார்ப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அமைச்சராக இருந்த ராசாவின் செயல்பாட்டால் அரசுக்கு ரூ 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழலைத்தான் பார்க்க வேண்டும். ஆரியர், திராவிடர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது.
ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டபோதே அமைச்சர் பதவியில் இருந்து ராசாவை நீக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி என நிரூபணம் ஆகியுள்ளது.
தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதில் அதிமுகவும், தேமுதிகவும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. அதனால் அதிமுக ஆதரவு கேட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தேர்தலில் அதிமுக தொழிற்சங்கத்துக்கு தேமுதிக ஆதரவு அளித்தது.
இது கூட்டணி அல்ல. தேர்தல் நேரத்தில் அப்போதுள்ள சூழலைப் பொறுத்து கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications