ஆந்திர அரசுக்கு புது நெருக்கடி: பதவியேற்ற அன்றே 2 அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: நேற்று காலை பதவியேற்ற ஆந்திர அமைச்சர்களில் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நேற்று காலை ஆந்திர முதல்வர் கிரன் குமார் ரெட்டி தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். இதில் பல அமைச்சர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் வசந்த குமார் இரவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதே போல கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக பதவியேற்ற வெங்கட் ரெட்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பல அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை பிடிக்காமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications