ஐஎம்எப் தலைவர் பதவி-அலுவாலியா பெயர் பரிசீலனை?
ஆனால், இதை அலுவாலியா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பதில் உண்மை இல்லை. அது ஆதாரமற்ற தகவல். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டிருக்கலாம் என்றார்.
தற்போதுள்ள ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டாமினிக் ஸ்டிராஸ் கானின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராதவர்களைத் தான் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியி்ன் புதிய தலைவர்களாக நியமிக்க வேண்டும் என்று நேற்று கான் தெரிவித்திருந்தார்.
இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுருந்ததாவது,
கான் என்ன முடிவு செய்தாலும் புதிய ஐஎம்எப் இயக்குநர் வளரும் நாடுகளைச் சேர்ந்த ஒருவராகத் தான் இருப்பார்.
பொருளாதார நிபுணரும், பிம்கோவின் தலைவருமான முஹம்மது எல் எரியன், இந்தியாவின் மூத்த திட்டக்குழு அதிகாரி மான்டெக் சிங் அலுவாலியா, பிரேசில் சென்ட்ரல் வங்கித் தலைவர் அர்மினியோ பிராகா மற்றும் மெக்சிகோ சென்ட்ரல் வங்கித் தலைவர் கில்லர்மோ ஆர்டிஸ் ஆகியவர்களின் பெயர்கள் ஐஎம்எப் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.