ராகுல் காந்தியின் கணக்குப் படி நடைபோடுகிறோம்-சொல்கிறார் கார்த்தி!
சென்னை: ராகுல் காந்தி குறித்து யாரும் தப்புக் கணக்குப் போட வேண்டாம். அவரையும், காங்கிரஸையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாளைய அரசியல் குறித்து கணக்குப் போடுகிறார் ராகுல் காந்தி. அவர் போடும் கணக்கின் அடிப்படையில்தான் நாங்கள் நடைபோடுகிறோம் என்று பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் பேச ஆரம்பித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த சோனியா காந்தியின் 64வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கார்த்தி சிதம்பரம் பேசுகையில்,
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், சோனியா காந்தி 1998ல் தலைவராகப் பொறுப்பேற்றபோது மத்தியில் மட்டுமல்ல பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
நன்றாக நடந்து வரும் நிறுவனத்தை லாபகரமாக நடத்ததுவதைவிட நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனத்தை லாபகரமாக நடத்துவதே சாதனை. எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் அடித்தட்டு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அவரது சாதனைகளை மக்களிடம் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.
பீகார் மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ராகுல் காந்தியின் திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. 19 தொகுதிகளில் 2வது இடத்தையும், 95 தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
தனித்து போட்டியிட்டதன் மூலம், உண்மையான பலத்தை காங்கிரஸ் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், தேர்தலில் கூட்டணி வைத்திருந்தால் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ராகுல் இன்றைய அரசியல் கணக்கு போடுபவர் அல்ல. எதிர்கால அரசியல் கணக்கு போடுகிறார்.
தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் என்ன பலன் கிடைக்கும்? கூட்டணி வைத்து போட்டியிட்டால் என்ன பலன் என்ற கணக்கைப் போட்டு தான் நாங்கள் நடைபோடுகிறோம். தேர்தல் முடிவில் பூஜ்ஜியத்தை மட்டுமே கண்ட சிலர் நாங்கள் முதல்வராவோம் என ஆசைப்படும்போது, இந்தியா முழுவதும் ஆளும் காங்கிரஸ் ஏன் ஆசைப்படக் கூடாது? யாரும் தப்பு கணக்கு போட வேண்டாம். ராகுலையும், காங்கிரசையும் ஒதுக்கி விட்டு அரசியல் நடத்தவும் முடியாது என்றார் கார்த்தி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications