போராட்டத்தில் ஈடுபட்ட சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் 40 பேர் சஸ்பெண்ட்
பெரம்பலூர்: திய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 40 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு அளிக்க வேண்டும், நீண்ட காலமாக பணி புரிந்து வரும் பருவகால தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் கடந்த 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் 15 கூட்டுறவு சர்க்கரை ஆலை, 2 பொதுத்துறை ஆலை என மொத்தம் 17 சர்க்கரை ஆலையை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திருத்தணி, கள்ளக்குறிச்சி, அரூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஆலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொழிலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications