3 அமாவாசைக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறி விடும்-பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்
Subscribe to Oneindia Tamil
வால்பாறை: 3 அமாவாசை முடிந்த பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறி விடும் என்று ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்.
வால்பாறை நகராட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஜெயராமன் பேசுகையில்,
இன்னும் மூன்று அமாவாசைக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் தோற்கடிக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்.
தனியார் எஸ்டேட்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு இடத்தை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொண்டு, ஏழை, எளிய தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தலா இரண்டு சென்ட் இடம் வழங்குவதோடு, அவர்களுக்கும் வீடும் கட்டித்தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications