Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தாக்குதலுக்குள்ளான தமிழக மீனவர்கள்-இலங்கை அட்டகாசம் தொடருகிறது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படைக் காடையர்கள் தாக்கி மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி, மீனவர்களையும் தாக்கி விரட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கு சுத்தமாக இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை எந்தப் பாதுகாப்பும் கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்போதெல்லாம் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 600 படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர். மேலும் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்திய கடலோர எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர், விலை மதிப்புமிக்க மீன்களையும் பறித்து சென்றனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகுகளில் ஏறி மீன்களை அள்ளிச் சென்றனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என விரட்டி அடித்தனர்.

இதேபோல் கடந்த வாரம் காரைக்கால் பகுதி மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், வழிகாட்டும் கருவிகளையும், மீன்களையும் பறித்து சென்றனர்.

இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+