For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் அக்கிரமம்-23 வயதுப் பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த 78 வயது தாத்தா

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வீடு புகுந்து 23 வயதுப் பெண்ணைக் கற்பழித்துள்ளார் 78 வயது முதியவர் ஒருவர்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த முதியவர். இவரது பக்கத்து வீட்டில் 23 வயதுப் பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அந்தப் பெண்ணின் கணவருக்கும், முதியவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதைப் பார்த்த அந்த முதியவர் வீட்டுக்குள் நுழைந்து அப்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது கணவர் வந்ததும் நடந்ததைக் கூறினார். இதனால் ஆத்திரமைடந்த பெண்ணின் கணவர், முதியவரை அடித்து உதைத்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வந்து முதியவரைக் கைது செய்தனர்.

அதேசமயம், முதியவரைத் தாக்கியதற்காக பெண்ணின் கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

English summary
78 yr old man raped 23 yr old woman in Maharashtra. This Seutuagenarian had a land dispute with the woman"s husband. Recently the woman"s husband went outside. That woman was alone in the house. Using this the old man raped the woman. He was arrested later by the police. The woman"s husband was also booked for beating the old man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X