சேலம் சாலை விபத்தில் 8 ஆந்திர ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 8 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குப் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன், இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த பஞ்சு ஏற்றியிருந்த லாரி மீது மோதி விட்டது.
இதில் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்களில் 12 வயது சிறுவன் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications