சோனியாவை சந்தித்த ஆந்திர முதல்வர்: தெலுங்கானா குறி்த்து ஆலோசனை
டெல்லி: நாளை மாலை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியாகவிருக்கின்ற நிலையில் இன்று ஆந்திர முதல்வர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவர் ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்தார்.
அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாகவும், ஆந்திர அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
நாளை வெளியாகவிருக்கும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி தெரந்து கொள்ள ஆந்திர மாநிலமே ஆவலுடன் காத்திருக்கின்றது.
தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்படவில்லை என்றால் 25 காங். எம்.எல்.ஏ.க்கள், 11 எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications