தமிழகத்தில் 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு
நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க கடந்த நவம்பர் 7-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை விடு்முறைக்காக பலர் சொந்த ஊருக்கு சென்றதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 13-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
கடைசி நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர். வாக்களர்களிடம் இருந்து பெறப்பட்ட சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்து அனைத்து வீடு, வீடாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வாக்கு பதிவு அலுவலர்கள் இறுதி ஆணை பிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர்களின் முழு விபரங்களையும் கம்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என சரி பார்த்து கொள்ளலாம். இது தவிர அங்கீகரிக்கப்பட்ட அரசி்யல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications