அமைச்சர் பதவியில் இருந்து கபில் சிபலை நீக்க வேண்டும்-பிரதமருக்கு சரத்குமார் கோரிக்கை
மதுரை: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கபில் சிபலை நீக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1. 76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. மேலும் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவையும், அவருடைய தொழில் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களையும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவது நாடறிந்த செய்தி.
2ஜி ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகள் பல இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதியில்லாதவை என்றும், பிரதமர் அலுவலகம் அறிவுறுத்திய பல கருத்துக்கள் மீறப்பட்டிருக்கின்றன என்றும் தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சனையில் குற்றவாளிகளை கண்பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இவ்வளவு நாட்கள் கழித்து, இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகு, எதுவுமே நடக்காதது போல் 2ஜி ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது விசாரணையை திசை திருப்பி உண்மையை மூடி மறைக்கும் தேசத் துரோக செயலாகும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் இல்லை என்று ஒரு மத்திய அமைச்சர், அதுவும் அதே தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த அமைச்சரான கபில் சிபல் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பது ஜனநாயக மாண்புகளை, தேசத்தின் உயர்ந்த அமைப்புகளை கேலிக்கூத்தாக்குவதற்கு சமமாகும்.
எனவே, ஊழல் செய்தவர்களை காப்பாற்ற பாடுபடும் கபில் சிபலை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications