கன்னியாகுமரி உபகார அன்னை ஆலயத்தில் 87 பானைகளில் 15ம் தேதி பொங்கல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (15ம் தேதி) 87 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், கோயில்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி அன்று 87 அன்பியங்களை குறிக்கும் வகையில் 87 பானைகளை ஆலய முற்றத்தில் வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிகாலை 5 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பங்குதந்தை லியோன் கென்சன் துவங்கி வைக்கிறார். 6.15 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications