கேன்டீன் ஸ்டோர் ஊழல்-பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராகி ராணுவத் தளபதி விளக்கம்
டெல்லி: ராணுவ கேன்டீன் ஸ்டோரில் பொருட்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே.சிங்.
ராணுவத் தலைமைத் தளபதி ஒருவர் பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.
இந்த விசாரணைக்கு வருமாறு முப்படைகளின் தலைமைத் தளபதிகளுக்கும் பொதுக் கணக்குக் கமிட்டி உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்புத்துறையின், கேன்டீன் ஸ்டோர் துறையின் நிர்வாகத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் கமிட்டி விசாரித்து வருகிறது. இன்று காலை கமிட்டி முன்பு ஆஜரானார் சிங். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.
விமானப்படைத் தளபதி பி.வி.நாயக்கும் இன்று ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது. கடற்படை சார்பில் அதன் துணைத் தலைவர் டி.கே.தீவான் ஆஜராவார். கடற்படைத் தலைமைத் தளபதி நிர்மல் வர்மா இந்தோனேசியா சென்றிருப்பதால் அவர் வரவில்லை.












Click it and Unblock the Notifications