கோலாகலமாக இன்று தொடங்குகிறது சென்னை சங்கமம்

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழகத்தின் இதர பகுதிகளுடன், கலாச்சார, கலை ரீதியாக ரொம்பவே தனிமைப்பட்டு இருக்கிறது சென்னை. தமிழகத்தின் கிராமங்களில் உயிரோடு உயிராக இணைந்திருக்கும் பல்வேறு கலைப் பொக்கிஷங்களை சென்னை மக்களில் பலர் அறியாத நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
ஏராளமான நாட்டுப்புறக் கலைகள், கிராமத்து உணவு வகைகள் உள்ளிட்டவை சென்னை நகர மக்களுக்கு அன்னியமாகவே இருந்து வந்தது.இதற்கு முடிவு கட்டிய பெருமை தமிழ் மையத்திற்கு உரியது. பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மையத்துடன் இணைந்து திமுக எம்.பி. கனிமொழியும், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை சங்கமம் என்ற பெயரில் சென்னைக்கு தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் சங்கமம்.
சென்னை மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த கலை விழா. பொங்கல் பண்டிகையையொட்டி இது நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான சங்கமம் கலை விழா இன்று தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு தீவுத் திடலில் நடைபெறும் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னிலை வகிக்கிறார். கனிமொழி அறிமுக உரை நிகழ்த்துகிறார். தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் தொகுப்புரை நிகழ்த்துகிறார்.
தொடக்க நிகழ்ச்சியாக வானம் வசப்படும் என்ற இசை நாடகம் நடைபெறும் என்று தமிழ் மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications