கோலாகலமாக இன்று தொடங்குகிறது சென்னை சங்கமம்

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழகத்தின் இதர பகுதிகளுடன், கலாச்சார, கலை ரீதியாக ரொம்பவே தனிமைப்பட்டு இருக்கிறது சென்னை. தமிழகத்தின் கிராமங்களில் உயிரோடு உயிராக இணைந்திருக்கும் பல்வேறு கலைப் பொக்கிஷங்களை சென்னை மக்களில் பலர் அறியாத நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
ஏராளமான நாட்டுப்புறக் கலைகள், கிராமத்து உணவு வகைகள் உள்ளிட்டவை சென்னை நகர மக்களுக்கு அன்னியமாகவே இருந்து வந்தது.இதற்கு முடிவு கட்டிய பெருமை தமிழ் மையத்திற்கு உரியது. பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மையத்துடன் இணைந்து திமுக எம்.பி. கனிமொழியும், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை சங்கமம் என்ற பெயரில் சென்னைக்கு தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் சங்கமம்.
சென்னை மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த கலை விழா. பொங்கல் பண்டிகையையொட்டி இது நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான சங்கமம் கலை விழா இன்று தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு தீவுத் திடலில் நடைபெறும் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னிலை வகிக்கிறார். கனிமொழி அறிமுக உரை நிகழ்த்துகிறார். தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் தொகுப்புரை நிகழ்த்துகிறார்.
தொடக்க நிகழ்ச்சியாக வானம் வசப்படும் என்ற இசை நாடகம் நடைபெறும் என்று தமிழ் மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications