மதுரை இலந்தைக்குளத்தில் ஹனிவெல் சாப்ட்வேர் நி்றுவனத்துக்கு 4.5 ஏக்கர் நிலம்

Subscribe to Oneindia Tamil

Madurai IT park model
மதுரை: மதுரை இலந்தைகுளத்தில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று எல்காட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ்பாபு கூறினார்.

மதுரை இலந்தைக்குளத்தில் 28.91 ஏக்கரிலும், வடபழஞ்சியில் 245.17 ஏக்கரிலும் எல்காட் சார்பில் இரு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இந்த பூங்காக்களை தொழிலதிபர்களுக்கு சுற்றிக் காட்டி அதன் வசதிகளை விளக்க எல்காட் சார்பில் ரோட் ஷோ நடத்தப்பட்டது. அப்போது பேசிய சந்தோஷ்பாபு,

தற்போது நிறைய நிறுவனங்கள் இந்த பூங்காக்களில் இடம் கேட்கின்றன. இலந்தைகுளத்தில் எல்காட் கட்டடத்தில் சதுர அடிக்கான வாடகை 23 ரூபாய். மற்ற பகுதிகள் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும். இலந்தைக் குளத்தில் ஒரு ஏக்கர் நிலம் 30 லட்சம் ரூபாய்க்கும், வடபழஞ்சியில் 15 லட்சம் ரூபாய்க்கும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். வடபழஞ்சியில் பூங்காவுக்கு அருகே ரயில்வே மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இடம் கேட்டவுடன் வழங்கப்படும். வடபழஞ்சியில் இதுவரை ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. முழுத்தொகையும் செலுத்திய சத்யம் நிறுவனம், தற்போது அதைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது.

இப்பூங்காக்களின் மூலம் 100 சதுர அடிக்கு ஒருவருக்கு நேரடியாகவும், இருவருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இலந்தைக்குளம் தொழில்நுட்பப் பூங்காவில் அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்துவிட்டன. அதை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே இலந்தைக்குளத்தில் ஹனிவெல் சாப்ட்வேர் நி்றுவனத்துக்கு 4.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+