மோடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் சென்னை போலீஸ்-பதிலளிக்காவிட்டால் வழக்கு

ஐபிஎல் போட்டி முறைகேடுகள் தொடர்பாக மோடி உள்ளிட்ட 7 பேர் மீது கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டுமே விசாரணைக்காக வந்து போனார். மோடி உள்ளிட்ட 6 பேர் மட்டும் இதுவரை வரவும் இல்லை, பதிலளிக்கவும் இல்லை, சம்மனை வாங்கவும் இல்லை.
இதையடுத்து இந்த 6 பேரும் வருகிற 25, 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி மத்திய குற்றப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஒருவேளை இதற்கும் அவர்கள் பதிலளிக்காவிட்டால், வராவிட்டால் 6 பேர் மீ்தும் புதிதாக ஒரு வழக்கு தொடரப்படும் என காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
ஐபிஎல் முறைகேடுகள் தொடர்பாக லலித் மோடி எந்தவித விசாரணைக்கும் வராமல், டபாய்த்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வாரிய விசாரணைக்கும் இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை. கேட்டால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, மிரட்டல் இருக்கிறது என்று கதை கதையாக அளந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications