தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்-பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: இந்து மாணவர்களுக்கு உதவி தொகை வழங்காமல், மற்ற மதத்தினருக்கு உதவி வழங்கி வருவதைக் கண்டு பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள், இதனால் தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக பாஜக சார்பில் கடந்த நவம்பர் 19ம் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் இந்த யாத்திரை 29ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
அதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த யாத்திரை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், சிறுபான்மையின மாணவ, மாணவிகளைப் போலவே ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கோவில்களில் அரசு தலையிடக் கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை யாத்திரையில் வலியுறுத்தி வருகிறோம். 38 மாவட்டங்களிலும் பொதுமக்களை சந்திக்கிறோம்.
பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களுக்கு உதவி தொகை வழங்காமல், மற்ற மதத்தினருக்கு உதவி வழங்கி வருவதைக் கண்டு மாணவர்களும், பொது மக்களும் வேதனை அடைந்துள்ளனர். ஓட்டுக்காக மக்களை பிளவுபடுத்தும் இந்த போக்கு ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள், இதனால் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். சென்னையில் 29ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்த யாத்திரையின் மூலம் கணிசமான வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும், தேர்தல் முடிந்து அமையப் போகும் புதிய சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்களும் இருப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications