குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: 4 நாட்களுக்கு நண்பகல் வரை இந்தியா கேட் மூடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் குடியரசு தின ஒத்திகைகள் இன்று துவங்கி 4 நாட்கள் நடக்கவிருக்கின்றன. இதை முன்னிட்டு இந்தியா கேட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதை மதியம் வரை தவிர்க்குமாறு போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

குடியரசு தின அணிவகுப்பிற்கான ஒத்திகை ராஜ்பாத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடக்கிறது.

இந்த ஒத்திகை விஜய் சௌக்கில் இருந்து இந்தியா கேட் வரை நடக்கும். இது காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை நடக்கும். அதனால் காலை 8 மணிக்கே அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

பகல் 12 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ராஜ்பாத்தை தவிர்ககுமாறு கேட்டுக் கொள்கிறோம். விஜய் சௌக், ராஜ்பாத் மற்றும் இந்தியா கேட்டில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+