சர்வதேச இந்தி திரைப்பட விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு
மும்பை: சர்வதேச இந்தி திரைப்பட விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா என்ற பெயரில் இந்திப் படங்களுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது இந்த விஸ்கிராப்ட் நிறுவனம். கடந்த ஆண்டு இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் பட விழாவை நடத்திய அதே நிறுவனம்தான் இது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தூக்கி எறிந்ததும் இந்த நிறுவனம்தான்.
இதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவையும் நடத்தியது.
இந்தநிலையில் இன்று இந்த நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர்அதிரடி ரெய்டு நடத்தினர். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அங்கமாக இந்த ரெய்டு நடந்துள்ளது. வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
நிறுவனத்திற்குள் புகுந்த அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனை குறித்து விஸ்கிராப்ட் நிறுவனர் சபாஸ் ஜோசப் கூறுகையில், சோதனை நடந்தது உண்மைதான். இருப்பினும் அதற்கு மேல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று மொட்டையாக கூறினார்.












Click it and Unblock the Notifications