நில ஊழல்-முதல்வர் எதியூரப்பா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil

வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பலராஜ் ஆகியோர், எதியூரப்பா மீது 15 குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குகள் தொடுக்க மாநில ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக 2 வழக்குகளை இரு வக்கீல்களும் தொடுத்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 3 வழக்குகளை வக்கீல் பாஷா தொடர்ந்தார்.
இதுதொடர்பாக பாஷா கொடுத்த புகாரில், நிலத்தை சட்டவிரோதமாக மாற்றியது, அதிகார துஷ்பிரயோகம், குற்றச் சதி, மோசடி, முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார் பாஷா.
முதல் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள 23வது சிட்டி சிவில் செஷன்ஸ் கோர்ட்டிலேயே இந்த புதிய மூன்று வழக்குளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளிலும் எதியூரப்பாதான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications