மதுரை சிறையில் கைதி தூக்குபோட்டு தற்கொலை: சிறையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சிறையில் கொலை வழக்கில் கைதான கைதி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் வெள்ளைக்குட்டி. அவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கும், தனபாண்டியன் என்ற கைதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.
இதில் வெள்ளைக்குட்டி தனபாண்டியனை கரண்டியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தணபாண்டியன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சக கைதியை தாக்கியதற்கு தண்டனையாக அவரை சிறை நிர்வாகத்தினர் தனிச் சிறையில் அடைத்தனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications