இந்தியா-இந்தோனேசியா இடையே 15.1 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
டெல்லி: இந்தியா, இந்தோனேசியா இடையே 15.1 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவின் 62வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூத்யோனா கலந்து கொண்டார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளித்து கெளரவப்படுத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு குறித்து குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ இடையிலான நட்பையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், ஐநா., உலக வர்த்தக அமைப்பு, ஜி20 ஆகிய அமைப்புகளில் சர்வதேச பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தினார்.
தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தோனேசிய அதிபரிடம் எடுத்துரைத்த பிரதீபா பாட்டீல், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதை வலியுறுத்தினார்.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 15.1 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.












Click it and Unblock the Notifications