கர்நாடகத்தில் சர்ச்கள் மீது நடந்த தாக்குதலில் பாஜகவுக்கு தொடர்பில்லை-விசாரணைக் கமிஷன்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் சர்ச்சுகளை குறி வைத்து நடத்ப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் பாஜக மற்றும் சங் பரி்வார் அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்று இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூர், கோலார், உடுப்பி, பெல்லாரி ஆகிய நகரங்களில் சர்ச்சுகளை குறி வைத்து ஒரு கும்பல் தாக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அப்போது. இந்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச் செயல். அரசுக்குக் கெட்ட பெயரையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் நடந்த முயற்சி இது என்று அப்போது முதல்வர் எதியூரப்பா கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி பி.கே.சோமசேகரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தற்போது பாஜகவுக்கோ, சங் பரிவார் அமைப்புகளுக்கோ இந்த தாக்குதலில் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
இதுகுறித்து கமிஷன் அறிக்கையில், அரசியல்வாதிகள், பாஜக, சங் பரி்வார் அமைப்பினர், மாநில அரசு ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கிறிஸ்த அமைப்புகள் கொடுத்த புகார்களில் உண்மை இல்லை.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான சில விஷமிகளால் இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜக அரசு கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமோ என்ற எதிர்பார்ப்பில் இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று சந்தேகிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சோமசேகரா.












Click it and Unblock the Notifications