மும்பையில் 1000 டிரம் பதுக்கல் எண்ணெய் பறிமுதல், ஒருவர் கைது: 5 பேருக்கு வலைவீச்சு
மும்பை: மும்பையின், கர்லா பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஆயிரம் டிரம்களில் 2 லட்சம் லிட்டர் பதுக்கல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் பகுதியில் கூடுதல் கலெக்டர் சோனாவானே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆயில் மாபியா குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்டடுள்ளனர். அவ்வாறு நடத்திய சோதனையில் 2 லட்சம் லிட்டர் பதுக்கல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவித்தாவது,
கல்பனா தியேட்டர் அருகில் நகர குற்றவியல் பிரிவு போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது தான் இந்த டிரம்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக கபார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 முதல் 5 பேரைத் தேடி வருகிறோம் என்றனர்.
இந்த பதுக்கலில் பிற மாநில கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மேலும் சோதனைகள் நடந்து வருகின்றன என்று குற்றவியல் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications