வங்கக்கடலில் புயல் சின்னம்-கடல் கொந்தளிப்பு-5 மீனவர்கள் மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் உள்ளது. நாகை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

வட கிழக்குப் பருவ மழைக் காலம் முடிவடைந்து விட்டது. தற்போது பனிக் காலமும் முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் தென் மேற்குப் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இது தற்போது வலுவிழந்த நிலையில் இருப்பதாக வானிலை ஆய்வ மையம் கூறியுள்ள போதிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. தொடர்ந்து சூறைக் காற்று வீசி வருவதால் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்குச் சென்று இதுவரை திரும்பவில்லை. அவர்கள் கடல் கொந்தளிப்பில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்யலாம் என்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் காற்று வீசி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+