வங்கக்கடலில் புயல் சின்னம்-கடல் கொந்தளிப்பு-5 மீனவர்கள் மாயம்
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் உள்ளது. நாகை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழைக் காலம் முடிவடைந்து விட்டது. தற்போது பனிக் காலமும் முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் தென் மேற்குப் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இது தற்போது வலுவிழந்த நிலையில் இருப்பதாக வானிலை ஆய்வ மையம் கூறியுள்ள போதிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. தொடர்ந்து சூறைக் காற்று வீசி வருவதால் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்குச் சென்று இதுவரை திரும்பவில்லை. அவர்கள் கடல் கொந்தளிப்பில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்யலாம் என்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் காற்று வீசி வருகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications