வங்கக்கடலில் புயல் சின்னம்-கடல் கொந்தளிப்பு-5 மீனவர்கள் மாயம்
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் உள்ளது. நாகை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழைக் காலம் முடிவடைந்து விட்டது. தற்போது பனிக் காலமும் முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் தென் மேற்குப் பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இது தற்போது வலுவிழந்த நிலையில் இருப்பதாக வானிலை ஆய்வ மையம் கூறியுள்ள போதிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. தொடர்ந்து சூறைக் காற்று வீசி வருவதால் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்குச் சென்று இதுவரை திரும்பவில்லை. அவர்கள் கடல் கொந்தளிப்பில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்யலாம் என்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் காற்று வீசி வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications