சென்னையில் அமெரிக்க கொடியை எரித்த 50 பேர் கைது : அமெரிக்கத் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன் வைத்து அமெரிக்க கொடியை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் அன்மையில் மூடப்பட்ட ட்ரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டேக் பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் உள்ள அமெரி்க்கத் தூதரகம் முன்பு மாணவர் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தின.
அப்போது அமெரிக்க கொடியை எரித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூதரகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications