ரூ. 3 லட்சமாக வருமான வரி உச்சவரம்பை உயர்த்த கோரிக்கை-கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee
டெல்லி: வருமான வரி விதி விலக்கு பெறுவதற்கு தற்போது உள்ள 1.6 லட்சம் என்ற உச்சவரம்பை குறைந்தது ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பெரும்பாலான நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் கருதுவதாக அசோசம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து வரி கட்டுவோர் ஓரளவாவது நிவாரணம் இது மிகவும் அவசியம் என்றும் தலைமை செயலதிகாரிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அசோசம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாவது,

வரலாறு காணாத அளவுக்கு உணவுப் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்து உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளன. எனவே வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பை தற்போது ரூ. 1.6 லட்சம் என்பதிலிருந்து குறைந்தது ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பெரும்பாலான தலைமை செயலதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.6 லட்சமாக உள்ளது. இது மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு முறையே ரூ. 2.4 லட்சம், ரூ. 1.9 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பிப்ரவரி 28ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+