கோவை அருகே தம்பதியைக் கொன்று நகை, பணம் கொள்ளை : தனிப்படை அமைத்து விசாரணை
கோவை: கோவை அருகே கணவன், மனைவியைக் கொன்று வீட்டில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தெக்கலூர், சூரிபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் சண்முகம் (40). விசைத்தறி அதிபர். அவரது மனைவி மனோன்மணி (30). அவர்களுக்கு அபிராம் (3), கவீந்திரன் (7 மாதம்) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சண்முகம் தனது குடும்பத்துடன் கோவை அருகே சோமனூர் செகுந்தாளி புதுக்காடு தோட்டத்தில் வசித்து வந்தார். நேற்றிரவு சண்முகம் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று தம்பதியை கொடூரமாகக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கென ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications