இஸ்ரோவின் ஸ்பெக்ட்ரம் ஊழல்: பிரதமர் அலுவலகம் மறுப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் (Antrix Corporation) ஜி-சாட் செயற்கைக் கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை திவாஸ் திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கியதாககவும், இதனால் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் மத்திய தலைமை தணிக்கைத் துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரோ நிறுவனம் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளித்துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில் இந்தப் புகாரை பிரதமர் அலுவலகம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளிட்டுள்ள அறிக்கையில், எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இரண்டு நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு உள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இது போன்ற இழப்பு ஏதும் நடக்கவில்லை.
எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. எனவே, வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகையத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.
திவாஸ் நிறுவனத்திடம் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் சோதனைரீதியில் குத்தகைக்குதான் விடப்பட்டுள்ளது. ஆகையால் இவ்வளவு பெரிய வருவாய் இழப்பு ஏற்பட சாத்தியமே இல்லை. இதுதொடர்பாக சிஏஜி அலுவலகமும், விண்வெளித்துறையும் உண்மை நிலையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை தந்ததும் இதே தணிக்கைத்துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications