வன்னியர் சமுதாயத்தினர் பாமகவுக்கு வாக்களித்தால் அன்புமணி முதல்வராவார்-குரு
புதுச்சேரி: தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார் என்று வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குரு கூறினார்.
புதுச்சேரி மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. அதில் பேசிய குரு,
புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வசிக்கின்றனர். இவர்கள் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளர்ச்சி காணலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆள வேண்டும் என்று தான் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.
வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்தபோதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத் தந்தார்.
எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல்வராகி உள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல்வராகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார்.
வட தமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால், யார் தயவும் இன்றி நாம் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழ வைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.
தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார்.
இந்த சமுதாயத்தை டாக்டர் ராமதாசால்தான் வாழ வைக்க முடியும் என்றார் குரு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications