ராஜபக்சேவுக்கு புற்றுநோய்... மறுக்கும் மகன்!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு புற்றுநோய் உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று நாமல் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தந்தை ராஜபக்சேவுடன் தான் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், அவர் தொடர்பான அனைத்து தகவல்களும் தமக்கு தெரியும் என்றும், அவருக்கு புற்றுநோய் என்பது உண்மையற்ற தகவல் என்றும் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் ராஜபக்சே பயணம் மேற்கொண்டார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகவே ரகசியமாக அமெரிக்கா சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் ஆண்டர்சன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவலும் முன்பு செய்திகள் வெளியாகின.