காமன்வெல்த் போட்டி ஊழல்: 5 அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் ஆர்.பி.குப்தா, கே.யு.கே.ரெட்டி, ஏ.கே.சக்சேனா, சுர்ஜித் லால் மற்றும் நிகேஷ் ஜெயின் ஆகியோரது வீடுகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.
டெல்லியில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக போட்டி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளான பீனு, தர்பாதி, சஞ்சய் மொகிந்துரு, ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது உதவியாளர் தியோருத்கர் ஷேகரும் கைது செய்யப்பட்டார்.
சுரேஷ் கல்மாடியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந் நிலையில் இன்று காலை போட்டி ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் 5 பேரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆர்.பி.குப்தா, கே.யு.கே.ரெட்டி, ஏ.கே.சக்சேனா, சுர்ஜித் லால் மற்றும் நிகேஷ் ஜெயின் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.












Click it and Unblock the Notifications