தாமஸ் விவகாரத்திற்கு நான் தார்மீக பொறுப்பேற்கிறேன்-பிரதமர்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இதற்கு நான் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது பாயத் தொடங்கியுள்ளன. பிரதமர் இதற்குப் பொறுப்பேற்று விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்த விவகாரத்திற்கு நானே தார்மீக பொறுப்பேற்கிறேன். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கூட்டணி தர்மத்தின் நெருக்கடியால் இது ஏற்பட்டது என்று கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். அதற்கு இதில் தொடர்பில்லை.

தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பதிலளிக்கவுள்ளேன். முதலில் அங்குதான் பேச விரும்புகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+