தாமஸ் விவகாரத்திற்கு நான் தார்மீக பொறுப்பேற்கிறேன்-பிரதமர்

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது பாயத் தொடங்கியுள்ளன. பிரதமர் இதற்குப் பொறுப்பேற்று விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்த விவகாரத்திற்கு நானே தார்மீக பொறுப்பேற்கிறேன். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டணி தர்மத்தின் நெருக்கடியால் இது ஏற்பட்டது என்று கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். அதற்கு இதில் தொடர்பில்லை.
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பதிலளிக்கவுள்ளேன். முதலில் அங்குதான் பேச விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications