3வது மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது
சென்னை : தனது 3வது மனைவியிடம் செக்ஸ் ரீதியாக பெரும் தொல்லை கொடுத்து வந்த தலைமை ஆசிரியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் வரதராஜ். 49 வயதாகும் இவர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். அவர் மூலம் மகள், மகன் உள்ளனர்.
2வது மனைவி பெயர் விஜயலட்சுமி. ஆனால், வரதராஜின் செக்ஸ் வற்புறுத்தல் மற்றும் தொல்லை காரணமாக விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார் விஜயலட்சுமி.
இதையடுத்து வீட்டில் வேலை பார்க்க வந்த 45 வயதான புனிதா என்பவரை 3வதாக கல்யாணம் செய்து கொண்டார் வரதராஜ். ஆரம்பத்தில் நாட்கள் சந்தோஷமாகவே கழிந்தது.
ஆனால் வரதாஜின் செக்ஸ் வெறியைப் பார்த்து புனிதா விரக்தி அடைந்தார். இதனால் மோதல்கள் மூண்டன. தினசரி செக்ஸ வைத்துக்கொள்ள வரதராஜ் வற்புறுத்தியதால் வேதனை அடைந்த புனிதா. போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வரதராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.