சுனாமி எதிரொலி.. மாருதி பங்குகள் கிடுகிடு வீழ்ச்சி!!
மும்பை: ஜப்பான் சுனாமி மற்றும் அணு உலை வெடிப்பு காரணமாக, இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதியின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் மாருதியின் பங்குகள் 2.74 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து ரூ 1218.35க்கு விற்பனையாகின.
30 ப்ளூ சிப் பங்குகள் கொண்ட சென்செக்ஸில் இன்று மிக மோசமாக விற்பனையானவை மாருதியின் பங்குகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நிமிடங்களில் இந்த வீழ்ச்சியின் அளவு 3 சதவீதத்தையும் தாண்டியது.
ஜப்பானில் ஏற்பட்ட மோசமான சுனாமி சேதம் மற்றும் அணுஉலை வெடிப்பின் காரணமாக, மாருதியின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்க முன்வந்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேலும் இந்த பேரழிவு காரணமாக ஜப்பானின் இறக்குமதி முற்றாகக் குறைந்ததும் முக்கிய காரணமாகும்.
பிஎஸ்இயில் ஆட்டோ துறை குறியீட்டெண்ணில் மட்டும் 60 க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.
பஜாஜ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளும் சரிவுக்குள்ளாகின.
சென்செக்ஸிலும் இன்று இந்த சரிவு எதிரொலித்தது. பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 183 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 18144-ல் வர்த்தகம் நடந்தது. நிப்டி குறியீட்டெண் 57 புள்ளிகள் சரிந்து 5,437.35 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications