காங்கிரஸுக்கு சென்னையில் 5 தொகுதிகள்-12 தனி தொகுதிகள்
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு சென்னையில் மட்டும் 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. அதேபோல 12 தனித் தொகுதிகளையும் அது கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகளின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. இதில் எதிர்பார்த்த தொகுதிகள் தவிர சில புதிய தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி வாங்கியுள்ளது.
அதன்படி சென்னையில் மட்டும் இந்தக் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அவை...
- மயிலாப்பூர்
- தியாகராய நகர்
- ராயபுரம்
- அண்ணாநகர்
- திரு.வி.க.நகர் (தனி)
இந்த ஐந்து தொகுதிகளில் தற்போது மயிலாப்பூர், தி.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா நகர் திமுக வசம் இருந்த தொகுதியாகும். திரு.வி.க.நகர் புதிய தொகுதி.
இவை தவிர சென்னை நகரை ஒட்டியுள்ள ஆவடி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகளும் காங்கிரஸுக்குப் போயுள்ளன. இதில் ஆவடி புதிய தொகுதி, ஆலந்தூர் திமுக வசம் உள்ளதாகும்.
இவை தவிர 12 தனித் தொகுதிகளையும் திமுகவிடமிருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.
அவை...
- பூந்தமல்லி (தனி)
- திரு.வி.க.நகர் (தனி)
- ஸ்ரீபெரும்புதூர் (தனி)
- மதுராந்தகம் (தனி)
- செங்கம் (தனி)
- ஆத்தூர் (தனி)
- அவிநாசி (தனி)
- வால்பாறை (தனி)
- நிலக்கோட்டை (தனி)
- திருத்துறைப்பூண்டி (தனி)
- பரமக்குடி (தனி)
- வாசுதேவநல்லூர் (தனி)