மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் சேகர்பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
சென்னை: பொதுமக்களுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் பி.கே.சேகர் பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரூ.15 லட்சம் பறிமுதல்:
சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கென்று ஒவ்வொரு தொகுதிக்கும் துணை கலெக்டர் தலைமையில் பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரி மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்த 16 பறக்கும் படைகளுடன் கூடுதலாக முக்கிய இடங்களை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
அண்ணாநகரில் நடந்த வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் இருந்த ரூ. 15 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேகர்பாபு மீது வழக்கு:
நேற்று முன்தினம் பறக்கும் படை வண்ணாரப்பேட்டையில் ஆய்வு நடத்தியபோது திமுக வேட்பாளர் பி.கே. சேகர் பாபு பொதுமக்களுக்கு 2 மூன்று சக்கர மீன்பாடி வண்டிகள் கொடுத்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 2 மீன்பாடி வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறக்கும் படைகள் சென்னையில் உள்ள தொகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார் தெரிவிக்க விரும்புவோர் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 2010, 1800 425 2011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications