சட்டசபை தேர்தல்: நெல்லை, தூத்துக்குடி அதிமுகவில் பெண்களுக்கு வாய்ப்பில்லை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் 11 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
நெல்லை, தூத்துக்குடியில் ஏற்கனவே 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்தபோது ராதாபுரம் தொகுதி வேட்பாளராக சசிகலா புஷ்பா, தூத்துக்குடி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் ஆகியோ்ர் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தென்காசி, நான்குநேரி, ராதாபுரம், ஓட்டபிடாரம் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளர்களின் திருத்திய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
ராதாபுரம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வாய்ப்பை இழந்துள்ளார். அதே நேரத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜெனிபர் சந்திரன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, ஆலங்குளம், சங்கரன்கோவில், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications