கொடுங்கையூர் சி.எஸ்.ஐ. ஆலயத்தை இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்
சென்னை: கொடுங்கையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது பிளாக்கில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் சிறு குடிசையாக இருந்த இந்த ஆலயம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் கட்டடமாக ஆனது.
இந்த ஆலயம் இருக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதையடுத்து அந்த இடத்தை பழைய விலைக்கு வாங்க சி.எஸ்.ஐ. திருச்சபை முடிவு செய்தது. அதற்கான முன் பணத்தை கொடுக்கவும் தயாராக இருந்தது.
இந் நிலையில் இடத்தை காலி செய்து ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த ஆலயம் இடிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர். நேற்று காலையில் மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகள் வந்தனர்.
இதையறிந்த கொடுங்கையூர் எம்.ஆர். நகர், மூலக்கடை, கண்ணதாசன் நகர், ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு முன் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஐ.சி.ஐ. பேராயர் சிஷ்வா பிரகாஷ், பேராயர் சாம்சன், வடசென்னை போதகர்கள் ஐக்கியம் மற்றும் சபை கமிட்டி உறுப்பினர்கள் ஆலயத்தின் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
பேராயர்கள் சிஷ்வா பிரகாஷ், சாம்சன் ஆகியோர் கூறுகையில்,
இந்த ஆலயத்தில் 75 சதவீதம் தலித் மக்களும், 25 சதவீதம் மற்ற இனத்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
நியாயமான விலைக்கு இடத்தை கொடுக்குமாறும், அதற்காக முன் பணமாக ரூ. 25 லட்சத்தை கொடுத்து இடத்தை வாங்க தயாராக உள்ளோம். ஆனால் அதை ஏற்காமல் ஆலயத்தை இடிப்பதிலேயே குறியாக உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆலயத்தை இடிக்காமல் தடுக்க வேண்டும். இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்த உதவ வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications