நாளை புட்டபர்த்தி சென்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நாளை புட்டபர்த்தி விரைகிறார். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சத்ய சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
நாளை காலை புட்டபர்த்தி செல்லும் பிரதமர், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு டெல்லி திரும்புவார்.
முன்னதாக பாபாவின் மரணம் குறித்து அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்ட பிரதமர், பாபாவின் மரணம், பெரும் சோகத்தையும், ஆழமான ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்தவர் சாய்பாபா. அவரது அர்த்தப்பூர்வமான வாழ்க்கை அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோரும் கூட பாபா மீது மிகுந்த மரியாதையும், பக்தியும் வைத்திருந்ததே அவரது சிறந்த வாழ்க்கைக்கு சரியான உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர்.












Click it and Unblock the Notifications