சாய்பாபாவின் உபதேசங்கள் நம்மை வழிநடத்தும்: மாதா அமிர்தானந்தமயி
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: சத்ய சாய்பாபாவின் உபதேசங்களின் படி நடப்பதன் மூலம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் என மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
சத்ய சாய்பாபா உடல் நலக் குறைவால் நேற்று இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி அவரது இறுதிச் சடங்குககள் நடக்கின்றன.
சாய்பாபா குறி்த்து மாதா அமிர்தானந்தமயி கூறியதாவது,
இவ்வுலகில் தோன்றியவர்கள் உடலை விடுதல் என்பது தவிர்க்க இயலாதது தான். ஆனால் சூரியனை போல் ஞானத்திற்கு மறைவு என்பதே கிடையாது. சத்ய சாய்பாபா வழங்கிய அன்பு மற்றும் சகிப்புதன்மை பற்றிய உபதேசங்கள் அனைவருக்கும் ஆற்றலை அளிக்கக் கூடியவை. அவரது உபதேசங்களின்படி நடப்பதன் மூலம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். அவரது பக்தர்கள் அவர் காட்டிய உண்மை மற்றும் தர்ம வழியில் நடக்க வேண்டும் என்றார்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்













Click it and Unblock the Notifications