தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் தொடர் போராட்டம்: பாஜக
வேலூர்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் தொடர் போராட்டம் வெடிக்கும் என்று பாஜக மாநில துணை தலைவர் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வேலூரில் பாஜக மாநில துணை தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு, இலங்கை அரசை கண்டிக்கவில்லை.
ராஜபக்சேவை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஈடுபடக் கூடாது. இலங்கைப் படுகொலையை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியை திமுக உதறித் தள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 3,700 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கேபிள் மூலம் மின்சார வினியோகம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவ்வாறு இலங்கைக்கு மின்சாரம் கொடுத்தால், நாட்டு மக்களை ஒன்று திரட்டி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications