2 பாடங்களில் 200 மார்க்: செவித்திறன் குறைபாடுடைய மாணவி சாதனை
சென்னை: பிளஸ் டூ தேர்வில் 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சென்னை சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாகிதி சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் பள்ளியின் முதல் மாணவியாகவும் வந்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஷாகிதி 1000-க்கு 961 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை இதே பள்ளியில் படித்த ஷாகிதி 10-ம் வகுப்பில் 400-க்கு 361 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
இது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி பிருந்தா கூறியதாவது,
இந்தப் பள்ளி தொடங்கி 84 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியதில்லை. ஷாகிதி தான் அந்த சாதனையைப் படைத்துள்ளார். செவித்திறன் குறையுடைய மாணவர்களால் இரண்டு மொழிப் பாடங்கள் படிக்க இயலாது. அதனால் அவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் படித்தால் போதும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழ் மீடியம் படிப்பவர்கள் ஆங்கிலம் படிக்க மாட்டார்கள். அதேபோன்று இங்கிலீஷ் மீடியம் படிப்பவர்கள் தமிழ் படிக்க மாட்டார்கள்.
எனவே, செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 400 மதிப்பெண்களுக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 1100 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 29 மாணவிகளுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications