வாக்கு எண்ணிக்கை: மே 13-ம் தேதி மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: வரும் 13-ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணப்படும் அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 91 மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 13-ம் தேதி 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள் அதனைச் சார்ந்த பார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications