1500 பணியாளர்களை நீக்கியது டாடா ஸ்டீல்
Subscribe to Oneindia Tamil

பிரிட்டனில் உள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 5 ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள டாடா ஸ்டீல், அவசிய நடவடிக்கையாக 1500 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள பிரிவு தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்ததால் இந்த நடவடிக்கை என தனது செய்திக் குறிப்பில் டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
2007-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் கட்டுமானத் துறை மீட்சி பெறவில்லை என்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கையாக நிர்வாகச் செலவுக் குறைப்பு, பணியாளர் நீக்கம் போன்றவை அடுத்த சில மாதங்களில் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications