டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மே 20ம் தேதி இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.
Three days after the dismissal of her bail plea, DMK MP Kanimozhi along with Kalaignar TV MD Sharad Kumar today moved the Delhi High Court challenging the trial court's order. CBI Special Judge O P Saini had rejected Kanimozhi and Kumar's bail pleas on May 20 and ordered their "forthwith" arrest. They are currently lodged in Tihar Jail.