For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியைத் தாக்கிவிட்டு 10 பவுன் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

அதிமுக துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான எழுத்தாளர் பழ.கருப்பையா
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருகிறார்.

இன்று காலை 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கருப்பையாவின் மனைவி கலைவாணி (58) மட்டும் வீட்டில் இருந்தார்.

அவர், கருப்பையா இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். அவர் வீட்டில் இல்லை என்று கூறிய கலைவாணி, நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால், பதிலேதும் சொல்லாத அந்த நபர் திடீரென தனது ஹெல்மட்டால் அவரை தலையில் அடித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினான்.

கலைவாணி சுதாரித்து சத்தம் போடுவதற்கு அந்த நபர் தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் பழ.கருப்பையா வீட்டுக்கு விரைந்து விசாரணை நடத்தினர். செயினுடன் தப்பிச் சென்ற கொள்ளையன் அவசரத்தில் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான்.

அதை வைத்து அவனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து மாலையில் அவன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் முபாரக் என்று தெரியவந்துள்ளது.

ஏட்டு மனைவியிடம் நகை பறிப்பு-வாலிபர் பிடிபட்டார்:

இந் நிலையில் அண்ணா சமாதி அருகே பஸ்சில் ஏட்டு மனைவியிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த போலீஸ் ஏட்டு மனைவி சுஜாதா. இவர் மெரினா கடற்கரையில் இருந்து வீடு திரும்புவதற்காக அண்ணா சமாதி அருகே உள்ள பஸ் நிலையத்தில் நின்ற மாநகர பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது பஸ்சின் உள்ளே இருந்த வாலிபர் ஒருவர் சுஜாதாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.

அவர் கூச்ச லிட்டதும் அருகில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் பொது மக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்ப டைத்தனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஜோசப் (25) என்பது தெரியவந்துள்ளது.

English summary
ADMK MLA Pazha Karuppiah's wife was attacked at her Chennai Gopalapuram residence by a youth and her gold chain was snatched
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X