அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா மனைவியிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது
சென்னை: அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியைத் தாக்கிவிட்டு 10 பவுன் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
அதிமுக துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான எழுத்தாளர் பழ.கருப்பையா
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருகிறார்.
இன்று காலை 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது கருப்பையாவின் மனைவி கலைவாணி (58) மட்டும் வீட்டில் இருந்தார்.
அவர், கருப்பையா இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். அவர் வீட்டில் இல்லை என்று கூறிய கலைவாணி, நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால், பதிலேதும் சொல்லாத அந்த நபர் திடீரென தனது ஹெல்மட்டால் அவரை தலையில் அடித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினான்.
கலைவாணி சுதாரித்து சத்தம் போடுவதற்கு அந்த நபர் தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் பழ.கருப்பையா வீட்டுக்கு விரைந்து விசாரணை நடத்தினர். செயினுடன் தப்பிச் சென்ற கொள்ளையன் அவசரத்தில் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டான்.
அதை வைத்து அவனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து மாலையில் அவன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் முபாரக் என்று தெரியவந்துள்ளது.
ஏட்டு மனைவியிடம் நகை பறிப்பு-வாலிபர் பிடிபட்டார்:
இந் நிலையில் அண்ணா சமாதி அருகே பஸ்சில் ஏட்டு மனைவியிடம் செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த போலீஸ் ஏட்டு மனைவி சுஜாதா. இவர் மெரினா கடற்கரையில் இருந்து வீடு திரும்புவதற்காக அண்ணா சமாதி அருகே உள்ள பஸ் நிலையத்தில் நின்ற மாநகர பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது பஸ்சின் உள்ளே இருந்த வாலிபர் ஒருவர் சுஜாதாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
அவர் கூச்ச லிட்டதும் அருகில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் பொது மக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்ப டைத்தனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஜோசப் (25) என்பது தெரியவந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications